Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மவுனம் காப்பது ஏன்? : ப.சிதம்பரம்

ஏப்ரல் 24, 2019 05:32

புதுடில்லி : பாகிஸ்தான் பற்றி பேசும் பிரதமர் மோடி, நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளில் மவுனம் காப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாக்.,க்கு தான் என்னவெல்லாம் செய்தேன் என பிரதமர் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். பிரசாரம் முடிவதற்குள், மக்களை வதைக்கும் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் பேசுவாரா? வேலையின்மை, விவசாயிகளின் துயரம் மற்றும் கடன், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு ஆகியன நாட்டின் முக்கிய பிரச்னைகள். இந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? 

பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி மற்றும் சிறு-குறு தொழிலாளர்களின் அவலநிலை ஆகியவை குறித்து பிரதமர் பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தலைவர்களின் அறுவறுக்கதக்க வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக அவர்கள் கட்சியை சேர்ந்த தலைவர்களின் பேச்சுக்கள் குறித்தும் பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்